BREAKING NEWS

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: உலக அமைதிக்காகவும், கொரோனா நோய்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு.

 

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

பங்குத்தந்தை அருட்திரு.ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட மூத்தகுரு அருட்திரு.ஜோசப் ஜெரால்டு அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித அந்தோணியார்களின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. “பிறரன்பின் மூச்சு, பாவிகளின் சுருங்கிய இதயத்தை விசாலமாக்கும்” என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழியந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

 

இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், அன்பிய குழுவினர், பாடகற்குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

 

வருகின்ற 16-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. 17-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

 

CATEGORIES
TAGS