BREAKING NEWS

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர்,
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு சத்துணவு திட்டம், புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன .முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இது தொடர்ந்து. நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உடுமலைப்பேட்டை யில் பல ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது , மின்வாரிய மேற்பார்வை அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது .


மின்வாரிய அலுவலகத்தை. இடமாற்றம் செய்ய படுமானால் போராட்டத்தில் ஈடுபடுவோம். என்றும் தற்பொழுது பழனி மாவட்டம் உருவாக்கி மடத்துக்குளம் பகுதி இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அ.ம.மு.க. தொடர்ந்து எதிர்க்கும் என பேசினார். நிகழ்ச்சியில் நகர. ஒன்றியம். இளைஞர் அணி.மாணவர அணி. மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS