மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட அடைக்கலம் மாதா கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியில்
பத்தாண்டு காலமாக மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அவர்கள் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட அடைக்கலம் மாதா கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
தி.மு.க ஆட்சி அமைந்த உடன் 10 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அளித்த வாக்குறுதியின் படி ரூ.18.30 இலட்சம் மதிப்பீட்டில் 215 மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் திரு.மு.மதிவாணன், பகுதி கழக செயலாளர் திரு.நீலமேகம் ஆகியோரும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.
மக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு சாலை வசதி கிடைப்பதை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள்
CATEGORIES திருச்சி
