மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றவர்களை வியாழக்கிழமை ஆசிரியர்களும்,பொதுமக்களும் பாராட்டினர்.
ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போடட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 8 குறுவட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் ஜனவரி மாதம் தருமபுரியில் நடக்கவிருக்கும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளையும் ,பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை பி. கோகிலா , உடற்கல்வி ஆசிரியர் பா.வடிவேல் முருகன் ஆகியோரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கு.வசந்தி , சிக்கல் பள்ளியின் தலைமைஆசிரியை த.விஜிலா பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளும்,பொதுமக்களும் பாராட்டினர். மாநில அளவிலான கபடிபோட்டியில் வெற்றி பெற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.