மானாமதுரை வட்டத்தில் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா.

செய்தியாளர் வி.ராஜா.
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள உள்ளடக்கிய கல்வி மையத்தில் “இணைவோம், மகிழ்வோம்” என்ற நிகழ்வில் மையத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் மற்றும் இதர பள்ளகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர் திரு. பால்ராஜ், வட்டார. வள மைய மேற்பார்வையாளர் திரு. ராஜா ஆகியோர் பங்கேற்று விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி மாணவர்களை மகிழ்வித்தனர்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உதவி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்புக் கல்வியாளர்கள், இயன்முறை மருத்துவர், மைய ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.