BREAKING NEWS

மான்களால் சேதப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை.

மான்களால் சேதப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார். மேலும் இது தொடர்பாக கோரிக்கை மனுவும் வழங்கி இருந்தார்.

 

 

இந்நிலையில் இந்த மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் அனுப்பியுள்ள அறிக்கையில் கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய விளை நிலங்களில் மான்கள் சேதப்படுத்தமால் இருக்கும் வகையில் காப்புகாட்டினை சுற்றி வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் காப்புக்காட்டில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்யும் வகையில் நீர் குட்டைகள், சிறு தடுப்பணைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு,

 

அவற்றில் போதுமான அளவு நீர் நிரபப்பட்டு வருவதன் மூலம் மான்கள் காப்புகாட்டினை விட்டு வெளியேறமால் அவற்றின் வாழ்விடப்பகுதியில் பாதுகாப்பாக இருந்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கிராமபகுதியில் சுற்றித்திரியும் மான் இனங்கள் புள்ளிமான் இனத்தைச் சேர்ந்தது.

 

 

இம்மான் இனம் மிகவும் மென்மையான பயந்த சுபாவத்தை கொண்டுள்ளதால் மான்களை பிடித்திட முயற்சிக்கும் அல்லது வனப்பகுதிக்குள் விரட்டிட முயற்சிக்கும் போது ஏற்படும் அச்சத்தினால் மான்கள் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே மேற்படி மான்களை பிடித்திடவோ அல்லது காப்புக்காட்டுப் பகுதிக்குள் விரட்டிவிடவோ இயலாத சூழ்நிலை உள்ளது.

 

ஆகையால் மான்களால் ஏற்படும் பயிர்சேதங்களுக்கு உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்கும் மனுதாரர்களின் மனுக்கள் மீது தகுந்த விசாரணை மேற்கொண்டு பயிர் இழப்பீடு வழங்கிட அரசு விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS