மாவீரர் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் தீபம் ஏற்றி கண்ணீர் அஞ்சலி.

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தீபம் ஏற்றி, ஏராளமானவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
ஈழப்போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 27ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,
தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஈழப்போரில் வீர மரணம் அடைந்த குடும்பத்தை சேர்ந்த சாரதா, ஜெயந்தி ஆகிய இரண்டு பேர் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஏராளமானவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஈழப்போரில் வீர மரணம் அடைந்தவருக்கு அஞ்சலிதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்முள்ளிவாய்க்கால்