BREAKING NEWS

மின்தூக்கி பழுதடைந்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி..

மின்தூக்கி பழுதடைந்த காரணம் குறித்து  விசாரணை நடத்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி..

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்றைய முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி நடந்த விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 9 பேர் காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

காயமடைந்த வர்களில் சிலர் சுகாதார துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுப வர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேரில் நலம் விசாரித்து அவர்களுக்கு பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.  மேலும் உயிரிழந்த இருவரின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பாரத் என்னும் தனியார் நிறுவனத்தின் மூலம் மின்தூக்கி வாங்கப்பட்டது.

 

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்பட வேண்டும் அந்த வகையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மின்தூக்கி 2003 ஆம் ஆண்டு போடப்பட்டுள்ளது. இது பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் இருந்த போது நான் உட்பட அதிகாரிகள் மின்தூக்கியில் சிக்கியிருக்கிறேன். இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

கடந்த ஆட்சியில் பெயர் தெரியாத நிறுவனங்களுக்கு மின்தூக்கி கான்ட்ராக்ட் கொடுத்ததால் விபத்து ஏற்பட்டதா? அல்லது அதிகாரிகளின் தவறினால் நடந்ததா என விசாரணை நடத்தப்படும். இருந்தாலும் கூட சுகாத்துறையின் மூலமாக பொதுப்பணித்துறை அமைச்சரிடம் மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம் என கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )