BREAKING NEWS

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.

மயிலாடுதுறை மாவட்டம்,

மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர்.

 

 

தாய்மொழியாம் தமிழ் மொழியை காக்க தங்கள் உயிரை துச்சமென நினைத்து நம் இனத்திற்காக உயிர் நீத்த தியாகளின் நினைவு நாளில் மயிலாடுதுறை மண்ணில் பிறந்த மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி.சாரங்கபாணி அவர்களின் நினைவுத் தூணிற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா M.முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் அமைதி பேரணி சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

CATEGORIES
TAGS