வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், நகர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவை இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் வீர செல்வி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.கோ. ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவினாயகம் கலந்துகொண்டு தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர் ம. சந்திரா கலந்து கொண்டு தற்காப்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சரியான தொடுதல் தவறான தொடுதல் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும் இவ்விழாவில் ஆசிரியர் பயிற்றுநர் பழனிமுத்து, மேற்பார்வையாளர் உமாசங்கர், கணித பட்டதாரி ஆசிரியர் சண்முகம் மற்றும் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர், சுகாதாரப் பணியாளர்கள், கிராமப் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.