வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (40) த/பெ பிச்சுமணி தனது மனைவி தீபா (32), மகன் புஷ்பநாதன் (17),மகள் கலைவாணி (15) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
ஆறுமுகம் 06.11.2022 ஆம் தேதி இரவு மது சாப்பிட்டு உறங்கியதாகவும் 07.11.2022 காலை 07.00 மணி அளவில் மனைவி சென்று பார்க்கும் போது கணவர் இறந்த நிலையில் இருந்ததாகவும்,
அவ்வாறு உறவினர்களிடம் கூறியதாகவும் காட்டுமையிலுரை சேர்ந்த ஆறுமுகத்தின் பெரியப்பா மகன் முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், இறந்து போன ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் இது தொடர்பாக வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொள்ளும் போது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளதாகவும், கடந்த ஆறாம் தேதி காட்டுமையிலூரில் உள்ள தனது அக்கா மகள் மாலதி வீட்டுக்கு மனைவி தீபா சென்று வந்ததை கண்டித்ததாகவும்,
மகன் மகளை அடுத்ததாகவும் இதனால் இருவருக்கும் அன்று இரவு பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது, ஆறுமுகம் மது அருந்திவிட்டு, உணவு சாப்பிட்ட பின் அன்று இரவு படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபத்தில் இருந்த மனைவி தீபா மகன் புஷ்பநாதன் மகள் கலைவாணி ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தின் கழுத்தில் நைலான் கயிறால் இறுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் வேப்பூர் போலீசார் சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டதை கொலை வழக்காக மாற்றம் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.