BREAKING NEWS

வேலூரில் 7 சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

வேலூரில் 7 சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

வேலூரில் உள்ள அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து ஏழு சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக சிறார்கள் தப்பிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடம். இங்கு 16 வயது முதல் குற்றம் புரியும் 21 வயது உடைய சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று இரவு சுமார் ஏழு சிறார் கைதிகள் கழிவறையின் ஜன்னலை உடைத்து அவர்கள் பயன்படுத்தும் போர்வையை கயிறாக பயன்படுத்தி ஒருவர் மீது ஒருவர் ஏறி தப்பி ஓடி உள்ளனர். இதனை அறிந்த பாதுகாப்பு இட பாதுகாவலர்கள் மற்றும் காவல் துறையினர் தேடிய நிலையில் இரண்டு பேர் பெருமுகை அருகே பிடிபட்டுள்ளனர்.

மீதம் தப்பி ஓடிய ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக நிகழும் சம்பவம் ஆகும். ஏற்கனவே இரண்டு முறை இங்கு உள்ள சிறார்கள் தப்பியோடு உள்ளனர் அவர்களை காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்து மீண்டும் பாதுகாப்பு இடத்தில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

பாதுகாப்பு இல்லத்தின் துணை கண்காணிப்பாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏழு பேரில் இரண்டு பேர் பிடிபட்ட நிலையில் மீதமுள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

CATEGORIES
TAGS