வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி..

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் கட்டமாக இரண்டு நாட்களுக்கு (02/11/2022 -03/11/2022) ஆகிய தேதிகளில் இரண்டு அணிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.
இதனை வேலூர் மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) திரு.பூ. இராமகிருஷ்ணன் தலைமையிலும் மற்றும் கிங்ஸ்டன் பொரியல் கல்லூரியின் முதல்வர் அவர்களின் முன்னிலையிலும் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் பயிற்சிக்கான உபகரணங்கள் ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்பட்டது.
இப்பயிற்சியினை மாவட்ட வள மைய அலுவலர் திரு.க.உத்திராபதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் விமல் (DPMU), ரகு (கணினி உதவியாளர்) அம்பத்ராஜ் (கணினி உதவியாளர் ) ஆகியோர் பயிற்சி அளித்தனர்.