BREAKING NEWS

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அனைத்து கிறிஸ்துவ சபைகள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அனைத்து கிறிஸ்துவ சபைகள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இனப்படுகொலை தேவ ஆலயங்கள், வீடுகள் தீக்கிரையாக்கி சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் முழக்கங்கள் நடைபெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து கிறிஸ்தவ சபை போதவர்களும் சபை மக்களும் மற்றும் சிறுபான்மையினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி வேலூர் நாடாளுமன்ற செயலாளர் செல்லப்பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 

அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் கே.சுவாமிநாதன், முன்னாள் காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் விஜயன், புரட்சி பாரத கட்சியின் மாவட்ட பொருளாளர் குட்டி, தமிழ் முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிஜாமுதீன், குடியாத்தம் 35 வது வார்டு உறுப்பினர் மனோஜ் மற்றும் சிறுபான்மையினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குடியாத்தம் ஒருங்கிணைந்த ஊழியர்களின் ஐக்கியத்தின் தலைவர் பிஷப் ஜி.கிளாரன்ஸ், பாஸ்டர்கள் மணி மைக்கேல், தாஸ், காமராஜ், சாமுவேல் புருஷோத்தமன், இளங்கோ, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் சகரியா, வேதநாயகம்,  கென்னத் , ஜான்சன், ராஜ்குமார், பேர்ணாம்பட் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் செயலாளர். அறிவழகன், அனைத்து சிறுபான்மை சமூகத்தினரும் திரளானோர் கலந்து கலந்து கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS