ஸ்ரீ சோமஸ்கந்தர் சமேத ஸ்ரீ பால திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் விடையாற்றி தரிசனத்தில் எழுந்தருளினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி சமேத காரீசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூஷிக வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம், மாவடி சேவை, மற்றும் திருக்கல்யாணம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினசரி திருவீதி உலா நடைபெற்று வந்தன.
நிறைவு நாளான இன்று மூலவர் தர்மசம்வர்த்தினி சமேத காரீசநாதருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சோமஸ்கந்தர் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி அலங்காரம் பிரம்ம உற்சவ விடையாற்றி தரிசனம் செய்து கற்பூர கற்பூர தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்கலவை ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி சமேத காரீசநாதர் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிபேட்டைராணிபேட்டை மாவட்டம்