BREAKING NEWS

கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை தூத்துக்குடியில் காளியம்மாள் பேட்டி

கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை தூத்துக்குடியில் காளியம்மாள் பேட்டி

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி பரதவர் நல சங்கம் சார்பில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் திறப்பு விழா தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு சாலை மாதா பேராலயம் அருகில் இன்று (01.05.2025) மாலை தலைமைச் சங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பாண்டியபதி தேர்மாறன் நினைவு இடத்தில் மலர் அஞ்சலி செலுத்துதல், பனிமய மாதாவுக்கு மாலை அணிவித்தல், மற்றும் பாண்டியபதி புனரமைக்கட்ட கட்டிடம் திறப்பு ஆர்ச்சிப்பு, மற்றும் குத்துவிளக்கு ஏற்றுதல், நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் தலைமைச் சங்க அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பாண்டியபதி தேர்மாறன், குரூஸ் பர்னாந்து மற்றும் சென்னை சிற்ப்பி சிங்காரவேலன் ஆகியோர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

தூத்துக்குடியில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கத்தை தலைவர் ஆரோக்கியராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பரதவ சமுதாய எழுச்சி பேச்சாளர் காளியம்மாள் கலந்து சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், மீனவர்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்கிறோம் என்று அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கச்சத்தீவு என்பது தேர்தல் நேரத்திற்கான ஒரு சொல்லாடல். கச்சத்தீவு என்பது தமிழக மக்களின் சொத்து இதனை எடுத்துக் கொடுக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது.

கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை மீட்பு. நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடந்து வரும் நிலையில் கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் எடுக்கிற திட்டத்தை கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடல் சூழ்நிலையில் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய பெட்டகம்.

கடலோர கோவில் மக்களிடம் எந்தவித கருத்து கேட்கும் ஆகவில்லை. ஜனநாயகநாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் கடலோர மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பாதிப்பை உணராமல் அனுமதி கொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சேது சமுத்திரத் திட்டம் ஃபெயிலியர் திட்டம் என்று அன்று நாங்கள் சொன்னோம்.

1200 கோடி ரூபாய் மக்களின் வரி பணத்தை கடலில் கொட்டி சேது சமுத்திரத் திட்டத்தை இன்று நீங்கள் சொல்கிறீர்கள் பெயிலியர் என்று. அதேபோன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் பெயிலியர் என்று இன்றே சொல்கிறோம் என்றார்.

மேலும் அரசியலை விட்டு நான் விலகவில்லை. ஆறு ஆண்டு காலம் குழந்தைகளை கூட பார்க்காமல் அரசியல் களத்தில் நின்று இருந்தேன். என் குழந்தைகள் என்னுடனே இல்லை. எனது தாயின் வளர்ப்பில் வளர்ந்துள்ளது. தற்போது குழந்தை எங்கள் ஊரில் பள்ளியில் சேர்த்து என்னோடு இருக்கின்றனர்.

அதனால் இப்போது தான் தேர்வு முடிந்துள்ளது. அவர்கள் கூட இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கும் இரண்டு மாத காலம் ஓய்வு தேவைப்பட்டது.

அதனால் திடீரென்று மற்றொரு இடத்திற்கு ஓட முடியாது அல்லவா. ஆனாலும் மக்கள் பணியில் தான் இருந்து கொண்டிருக்கிறேன் அரசியலை விட்டு ஒருபோதும் விலக முடியாது அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று கூறினார்.

இந்நிகழ்ச்சி திறப்பு விழாவில் முன்னாள் பாண்டியபதி பரதவ நல தலைமைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பீட்டர், தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், வழக்கறிஞர் பிரைட்டர், பாண்டியபதி பரதவ நல தலைமைச் சங்கத்தின் பொருளாளர் பெல்லா, பாதர் ஜேசுதாஸ், அமைப்பாளர் அந்தோணி சாமி, பொதுச் செயலாளர் இன்னாசி, மற்றும் ஊர் பரதவ நல கமிட்டியினர் மற்றும் தேர்மாறன் மீட்பு குழு நிர்வாகிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS