BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி அல்லிநகரம் நகராட்சிலிருந்து வாக்கு மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.


தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது இதில் தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் 22 பேரூராட்சிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு இயந்திரங்கள் அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திலிருந்து அந்தந்த வாக்குப் பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே தபால் வாக்கு பதிவு நகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )