BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தேர்தல் தகராறு தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது, இதனை கண்டித்து பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதைப்போல் தஞ்சாவூரில் அதிமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டிடம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தி திமுக அரசு பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பினர், இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )