BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் விடுமுறை !

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது இதையடுத்து நாளை காலை 10 மணி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்த சுற்றறிக்கையின் படி
தேர்தல் பாதுகாப்பாகவும் நேர்மையாகவும் நடைபெற தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் நாளை காலை 10 மணிக்கு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்றே பிப்ரவரி 22 ஆம் தேதி ஆன தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளிலும் மது கடைகள் திறக்கப்படாது என அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக தேர்தலில் எந்த ஒரு பிரச்சனையும் வராது எனவும் தமிழக அரசால் தீர்மானமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )