BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சி.பி.எம்.எல் திண்டுக்கல்லில் சிபி எம்எல் கட்சியினர் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

 

ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சி.பி.எம்.எல் திண்டுக்கல்லில் சிபி எம்எல் கட்சியினர் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை உடனே நீக்கவும், இந்தியர்களை உடனடியாக மீட்கவும் கோரியும் போராட்டம்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)- யினர், ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் முக்கிய கண்டன உரையாக போர் வேண்டாம்! அமைதி வேண்டும்!! என முன்மொழிந்து ருசியா-உக்ரேன் நாட்டு மீது குண்டு மழை பொழிவதை கண்டித்தும்,உக்ரைனை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் போர் புரியும் ரஷ்யாவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை உடனடியாக கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் இந்த ரஷ்யா-உக்ரேன் இடையிலான போரில் இந்தியாவுக்கு ஆபத்தான நிலையில் இந்த போர் உள்ளதாகவும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை அரசு செலவில் பத்திரமாக திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இயலாத நிலையில் மத்திய அரசு உடனடியாக பதவி விலக வலியுறுத்தி இந்த போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட குழு உறுப்பினர் எம் கே நடராஜன் தலைமையில் பங்கேற்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )