BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நாளை பிரச்சாரம் நிறைவுபெறும் நிலையில் தஞ்சையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் சுயேச்சை வேட்பாளர் டிரம்ஸ் அடித்து ஓட்டு கேட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளை நிறைவு பெறுகிறது இதையடுத்து தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வன் தஞ்சாவூர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்களுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதைப்போல் 19வது வார்டில் திமுகவில் சீட்டு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடும் ராமச்சந்திரன் தனது சின்னமான கைப்பையை வாக்காளர்களுக்கு பிரச்சார நோட்டீசாக வழங்கியதோடு ட்ரம்ஸ் அடித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதே 19வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழ்வாணன் அதிமுக வேட்பாளர் அருணன் மற்றும் தேமுதிக வேட்பாளர் துரை ஆகியோரும் இரவு நேரத்திலும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )