BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல். ஜோ பைடன் கவலை.

உக்ரைனின் சாபோரிஷியா அணுமின் நிலையம் ரஷ்ய படைகளால் தாக்கப்பட்டது குறித்தும், கதிர் வீச்சு அபாயம் குறித்தும் அந்நாட்டு அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கியிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விசாரித்தார்.
: வாஷிங்டன்: உக்ரைன் நாட்டின் சாபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது இன்று(மார்ச்.4) ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலால், அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்துவருகிறது.
தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த சாபோரிஷியா அணுமின் நிலையத்தில் ஆயிரக்கணக்கான டன் அளவு அணு எரிபொருள்கள், ரசாயனங்கள் உள்ளன. இதனால் கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” உக்ரைன் நாட்டில் சாபோரிஷியா அணுமின் நிலையம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கியிடம் கேட்டறிந்தார். அத்துடன் அணுமின் நிலையம் உள்ள பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும், தீயணைப்பு பணிகளுக்கு இடையூறு அளிக்காமல் இருக்குமாறும் ரஷ்ய அதிபர் புடினுக்கு வலியுறுத்தினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )