BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சியில் மதசார்பற்ற திமுக கூட்டணி கட்சியினர் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் – அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில்
மதசார்பற்ற திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லீலாவேலு,
தர்மராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வெற்றிச்செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் மேரிசுஜாஅருள் ஆகியோருக்கு வாக்கு சேகரிப்பில்
பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு
கலைஞர் எப்போதெல்லாம் முதலமைச்சராக இருந்தாரோ அப்போதெல்லாம் திருச்சி மாநகராட்சி வளர்ச்சியடைந்துள்ளது.
திருச்சியில் அமைந்துள்ள அனைத்து கட்டிடங்களும், அலுவலகங்களும், சாலைகளும், மழைநீர் வாய்கால்களும், பாலங்களும் அனைத்தும் கட்டப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் இந்த சுப்பிரமணியபுரம் பகுதியில் சொன்ன அனைத்து வேலைகளையும் எங்கள் ஆட்சியில் செய்திருக்கிறோம்.
5ஆண்டுகாலம் மாநகராட்சியை கைப்பற்றிய அதிமுக கட்சி எதுவும் செய்யவில்லை, பத்தாண்டு காலம் கடந்து தேர்தல் நடைபெறுகிறது.
பத்தாண்டு கழித்து நடைபெறும் தேர்தலில் மாநகராட்சியை எங்கள் கையில் தளபதி ஒப்படைத்து இருக்கிறார்.
இங்கு நிற்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் சொல்லும் வேலையை நான் தட்டாமல் செய்து தருவேன். கடந்த ஆட்சியில் எங்களுக்கு எதுவும் செய்ய விடவில்லை.

கருப்பு சிவப்பு வேட்டி கட்ட கட்டினால் அலுவலத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை, கலெக்டரிடம் சென்று ஒரு சத்துணவு வேலை கூட எதுவும் பேச முடியவில்லை அவர்ளுக்கு வாக்களித்தால் உங்களுக்கு நான் எப்படி செய்யமுடியும் நாங்கள் என்ன விவேகானந்தரா
எனவே எங்களுக்கு வாக்களித்தால் விடுப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
எங்களது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் தற்போது பல பணிகள் நடைபெற உள்ளது. கடந்த ஏழு மாத காலத்தில் 1300 கோடி ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள். 850 கோடிக்கு பேருந்து நிலையமும், மார்க்கெட்டையும் தந்துள்ளார்கள். 138 கோடிக்கு சாலைகள் போடப்பட்டு உள்ளது.
எஞ்சிய வேலைகள் விடுபட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். விடுபட்ட பாதாளப் அணைத் திட்டங்களும் நடைபெற உள்ளது. சுத்தமான குடிநீர் தருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தளபதி ஆட்சியில் கடந்த 7மாதத்தில் இத்தனையும் தரப்பட்டிருக்கிறது.
மேலும் இதில் வெற்றி பெற்று வந்தால் நாங்கள் செய்யத் தவறிய வேலைகளையும் இவர்கள் செய்வார்கள் என பேசினார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )