தலைப்பு செய்திகள்
தேர்தலுக்காக ஹிஜாப் விவகாரம் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜக வெற்றி பெற முடியாது காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறையில் பேட்டி:-
மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு மணி சங்கர் ஐயர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு மணிசங்கர்ஐயர் தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும், பொதுமக்கள் நல்லது செய்தால் பாராட்டுகின்றனர் ஆனால் தனியே நின்றால் தேர்தலில் வாக்குகள் அழிப்பதில்லை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் வாக்குகள் அளிப்பதில்லை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
எனவே கூட்டணி என்பது முக்கியமான ஒன்றாகும். அதேநேரம் தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சியை பெரிதாக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப உடை அணிந்து கொண்டுள்ளனர். இதனை தடுக்க நினைப்பது தவறான ஒன்றாகும். என்னதான் பிரிவினையை ஏற்படுத்தினாலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பூஜ்ஜியம் தான் பெரும். என்று பேசினார்.