BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒளிரும் மின்விளக்கு மற்றும் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐம்பத்தொரு வார்டுகளில் திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு பகுதியில் அதிமுக பெண் வேட்பாளர் சனாதினி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்,

வாக்காளர்களை கவரும் வகையில் ஒளிரும் எல்சிடி விளக்கில் வேட்பாளர் பெயர் புகைப்படம் மற்றும் இரட்டை இலை சின்னத்துடன் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார் .

மேலும் இரட்டை இலை சின்னம் கொண்ட பிளாஸ்டிக் கொடி சின்னத்துடன் வாக்கு கேட்டு வருகிறார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )