இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.

தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.
தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.
அவரது பிறந்த தினம் அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1037ம் ஆண்டு சதய விழா வருகிற 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.
இதனை ஒட்டி, பெரியக் கோவில் வளாகம், ராஜராஜ சோழன் சிலை மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன, மாநகராட்சி சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.