BREAKING NEWS

திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்

தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர் வருகின்ற 19ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் பாதயாத்திரை நடைபெற உள்ள நிலையில்,

 

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்க முன்னேற்பாடுகள் பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில் பாஜக அரசாங்க தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பாண்டியன் தலைமையில் பொது மக்களுக்கு அறியும் வண்ணம் மக்கள் பயன்படுத்து ஆட்டோக்களில் விளம்பரம் செய்யும் பணி நடைபெற்றது.

அரசாங்க தொடர்பு பிரிவு மண்டல தலைவர் ராமர் பாண்டியன், ஒன்றிய தலைவர் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் அம்பாசமுத்திரம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் நிர்வாகிகளுடன் ஒத்துழைப்போடு ஆட்டோக்களில் விளம்பரம் படுத்தும் பணி நடைபெற்றது.

 

மேலும் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவில் அருகில் பாஜக சார்பில் மாவட்ட துனைத்தலைவர் மங்களசுந்தரி தலைமையில், அரசாங்க தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தாசில்தார் வேலம்மாள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மண்டல பொதுச்செயலாளர் உதயகுமார்,கலை மற்றும் கலாச்சார பிரிவு சுதன், அரசாங்க தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS