10 ஆயிரம் பனைவிதைகள் தஞ்சை தமிழ்ப் பலகலை கழகத்தில் பதியம் செய்யும் பணியை பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் துவக்கிவைத்தார்.

தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் பனைத் திருவிழா, நிலத்தடி நீரை சேமிக்கவும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திடும் இயற்கை செல்வமான 10 ஆயிரம் பனைவிதைகள் தஞ்சை தமிழ்ப் பலகலை கழகத்தில் பதியம் செய்யும் பணியை பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் துவக்கிவைத்தார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 10 ஆயிரம் பனை மரங்களை வளர்க்க திட்டமிட்டு, இன்று பனை விதைகளை பதியமிட்டு பனைத்திருவிழாவினை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார்.

நுங்கு, பதனீர், பனம்பழம் என இயற்கை உணவுகளை வழங்கக்கூடிய பனை மரங்களை உருவாக்கி இயற்கையையும்,

சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம் என்று பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களும், மாணவர்களும், தஞ்சை மாநகராட்சி, மற்றும் மாவட்ட கிரீன் நீடா அமைப்பினரும் உறுதி எடுத்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
