வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 20வருடங்களுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நாடார் மகாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில்
கடந்த 1999 முதல் 2002ம் ஆண்டில் விலங்கியல் துறையில் பயின்ற மாணவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1999 முதல் 2002ம் ஆண்டில் விலங்கியல் துறையில் பயின்ற மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது வகுப்பறைகள், கல்வி கற்று கொடுத்த பேராசியர்களை நேரில் சந்தித்து தங்களது கல்லூரி, வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் முன்னாள் மாணவர்கள் பெரும்பாலும் தங்களது குழந்தைகளுடன் வகுப்பு ஆசிரியர்களை சந்தித்தனர்.