மாவட்ட செய்திகள்
செங்கம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்தன விவசாயிகள் வேதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் செவ்வாழை பச்சை வாழை கற்பூர வாழை ரஸ்தாளி – ஏலக்கி – மலைவாழை உள்ளிட்ட வாழைகள் பயிரிட்டு வருகின்றனர்.


கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பயிரிட்டு வளர்த்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்து விவசாயிகளை மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதை போல் காட்சி தொங்கிய வாழை மரங்கள் விற்று கைக்கு பணம் வருவதற்கு முன் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்தால் எவ்வித பயன்பாட்டிற்கும் இல்லாமல் முற்றிலும் வீணாகி போனதால் மனவேதனை அடைந்து வருகின்றனர்.


இல்லாமல் முற்றிலும் வீணாகி போனதால் மனவேதனை அடைந்து வருகின்றனர் வாழை விவசாயிகள்
எனவே தமிழக அரசு சேதமடைந்த வாழை பயிர் களை நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
