BREAKING NEWS

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

மழை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அரிவித்துள்ளது. தற்போது நிலவி வரும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இன்று துவங்கி அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று மே 22ம் தேதி தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நாளை மே 23 திங்கட் கிழமை முதல் 25ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாக ஒட்டி இருக்கும். மேலும் மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )