தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் நெய் உப பொருளுக்கு அக்மார்க் முத்திரை பெற்று 78 மெட்ரிக் டன் நெய் விற்பனை செய்து ரூ 85 லட்சம் லாபம்.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் உலக பால் தின விழா நடைபெற்றது இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி கிராம பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் தரமான பால் வழங்கிய மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்கப்பரிசினை வழங்கி கெளரவித்தார்.
தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.இந்நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையின்போது 17 டன் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதில் ரூ 35 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.
மேலும் நெய் உப பொருளுக்கு அக்மார்க் முத்திரை பெற்று 78 மெட்ரிக் டன் நெய் விற்பனை செய்யப்பட்டு ரூபாய் 85 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இவ்விழாவில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் கலந்து கொண்டனர்.