குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு.

குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வணக்கத்திற்குரிய மேயர் ரெ. மகேஷ் அவர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.


ஆலோசனைக் கூட்டத்தில் துணை மேயர் திருமதி. மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் திரு.பாலசுப்பிரமணியன், மாநகர் நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
