BREAKING NEWS

குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது ஏன்?

குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது ஏன்?

குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது ஏன் என்பது குறித்து தஞ்சையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நாகமுத்து உருக்கமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற குழந்தையை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர்தப்பிய தந்தைக்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில் உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது மேல் முறையிட்டு கிரிமினல் வழக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பினை கருவாகக் கொண்டு ஓய்வுபெற்ற டிஎஸ்பி மாணிக்கவாசகம் எழுதிய எது குற்றம் ஒரு தீர்ப்பில் துளிர்த்த நாவல் என்ற நூலை தஞ்சையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி ராஜா வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நாகமுத்து இந்நாள் நீதிபதி சிவஞானம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி நாகமுத்து பேசும்போது கல் உடைக்கும் ஏழை குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் பயின்று காதல் திருமணம் செய்து விபத்தில் மனைவியை பறிகொடுத்து காலையும் வேலையையும்,

இழந்த நிலையில் குழந்தையையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற அந்த தந்தை மன நோயால் பாதிக்கப்பட்டு இந்த செயலை செய்ததாக மருத்துவர் வழங்கிய சிறிய துண்டு சீட்டின் அடிப்படையில் அந்த தந்தையை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியதாக கூறியதோடு மக்கள் மன்றத்திலும் எது சரியான தீர்ப்பு என மேடையில் கேட்டபோது விடுதலை செய்தது தான் சரி என அனைவரும் கரம் எழுப்பி தெரிவித்த அதே கருத்தை தான் தானும் செய்ததாக உருக்கமாக நீதிபதி நாகமுத்து தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )