BREAKING NEWS

கோவில்பட்டியில் மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி….

கோவில்பட்டியில் மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் ஓடை தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகத்தாய் இவரது மகன்கள் செல்லத்துரை(26), முத்துச்செல்வம்(19), இருவரும் கட்டுமான பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.இதில் செல்லத்துரை மதுவுக்கு அடிமையாகி தினமும் குடிப்பது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு செல்லத்துரை தனது தாயிடம் மதுபோதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதைப் பார்த்த தம்பி முத்துச்செல்வம் தடுக்க முயன்றுள்ளார். தகராறு முற்றவே தம்பி முத்துச்செல்வம் அண்ணன் செல்லத்துரை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் செல்லத்துரையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் முத்து செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் மதுபோதையில் குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )