இன்று 12525 கிராமங்களுக்கு இணையவசதி!! ஸ்டாலின் தொடங்கி வைப்பு!!

இந்தியாவில் கிராமப்புறங்களில் இணைய வசதியை அறிமுகப்படுத்த பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி செயல்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி,இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,525 கிராமங்களில் இணைய வசதி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று இணையவசதி ஏற்படுத்தி தரும் பாரத் நெட் திட்டத்தை முதல்வர் ஸ்டாலினை தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 10 மாதங்களுக்குள் இணைய வசதி முழுமையாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized
TAGS தலைப்பு செய்திகள்
