திருக்கோயிலின் ஆய்வின்போது நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி தைலம் தயார் செய்து சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும்

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் 07-07-2021 அன்று திருக்கோயிலின் ஆய்வின்போது நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி தைலம் தயார் செய்து சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும்

என அறிவித்துள்ளதின் படி தற்போது சுமார் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பிலான பாத்திரத்தில் சுமார் 44 மூலிகைகள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு சந்தனாதி தைலம் சுமார் 8 மாத காலங்களில் தயார் செய்ய உத்தேசித்து இன்று(13-06-2022) காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜைகள் செய்யப்பட்டு சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருநெல்வேலி இந்து சமய அறநிலைத்துறை தக்கார்,உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி கண்காணிப்பாளர், சுப்புலெட்சுமி, மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
