BREAKING NEWS

செம்பட்டி அருகே ஆசிரியர்கள் அலட்சியத்தால் ஆபத்தை உணராமல் அரசு பள்ளி மாடியை சுத்தம் செய்த மாணவர்கள்.

செம்பட்டி அருகே ஆசிரியர்கள் அலட்சியத்தால் ஆபத்தை உணராமல் அரசு பள்ளி மாடியை சுத்தம் செய்த மாணவர்கள்.

செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியின் மாடியில் இலைகள் தேங்கி, மழைநீர் வெளியேறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாடியை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாடியில் ஏறி அங்கு தேங்கி கிடந்த இலைகளை மாணவர்கள் சுத்தம் செய்தனர். அப்போது சில மாணவர்கள், ஆபத்தான முறையில் மாடியில் அங்கும் இங்குமாக தாவியபடி இருந்தனர். மேலும் சிலர், கைப்பிடி சுவரில் ஏறி விளையாடினர்.

இந்த காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )