BREAKING NEWS

போலி நகைகளை அடகு வைத்து உல்லாச வாழ்க்கை, சலூன் கடைக்காரர் பகீர் வாக்குமூலம்.

போலி நகைகளை அடகு வைத்து உல்லாச வாழ்க்கை, சலூன் கடைக்காரர் பகீர் வாக்குமூலம்.

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் அடகுக்கடை நடத்தி வருபவர் சுரேஷ். இவர் முதலார் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சுரேஷ் கடையில் இல்லாத நிலையில் பெண் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார். அப்பாது கடைக்கு வந்த பெண் தன்னை காவியா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் 9 கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணத்தை பெற்று சென்றுள்ளார்.

மாலை சுரேஷ் கடைக்கு திரும்பி வந்த போது அடகுக்கு வந்த நகைகளை சரிபார்த்துக் கொண்டிருந்த போது ஒரு வளையல் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அதை சோதித்து பார்த்த போது அது போன்று தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.உடனே சுரேஷ் தனது கடையில் பொருத்தி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் ஒரு ஆணுடன் வந்த இளம்பெண்தான்  போலி வளையலை அடகு வைத்தார் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் சுரேஷ் கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு சென்று ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

இதற்கிடையில் நேற்று காலை கொற்றிகோடு போலீசார் வேர்கிளம்பி என்ற இடத்தில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை மடக்கி காரை ஓட்டி வந்த அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர்  முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது பெயர் ஜேசுராஜா என்பதும், நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த ஜேசுராஜா, முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. திருமணமான இவருக்கு 2 மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.தான் நடத்தி வரும் சலூன் கடையில் குடும்பம் நடத்த போதுமான வருமானம் கிடைக்காததால் குறுகிய காலத்தில் தவறான முறைகளில் பணம் சம்பாதிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அப்போது ஜேசுராஜாவுக்கு கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்த பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த அனுஷா என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஜேசுராஜாவுக்கும், அனுஷாவுக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கவரிங் நகைகளை சிறிய நகைக் கடைகளில் அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு போலி நகைகளை அடகு வைத்து மனைவிக்கு 3 அடுக்கு கொண்ட குடியிருப்பும், கள்ள காதலியுடன் சொகுசு காரில் பல்வேறு பகுதிகளுக்கு இன்ப சுற்றுலா சென்று அறை எடுத்து தங்கி சொகுசு வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

கடைசியாக போலி வளையலை அடகு வைத்து ரூ.30 ஆயிரத்தை சுரேஷிடம் பெற்ற போது தான் வசமாக மாட்டிக் கொண்டேன் என்று மோசடி மன்னன் ஜேசுராஜா தனது வாக்குமூலத்தில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இவரிடம் ஏமாந்த சிறிய நகைக்கடை உரிமையாளர்கள் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன் மூலம் ஜேசுராஜின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று தெரிகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )