அக்னிபத் திட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அந்தியூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார் துணைத்தலைவர் பழனிமுத்து முன்னிலை வகித்தார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை கண்டித்து கண்டன கோஷங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அந்தியூர் நகர தலைவர் ஜலாலுதீன் நன்றி உரையாற்றினார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
