மலேசிய நாட்டில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, இருநாட்டின் முறையான ஒப்புதலோடு வந்தால் நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் தஞ்சையில் நடைபெற்ற மலேசிய நாட்டில் தொழில்வாய்ப்புகள் குறித்த தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தகவல்.
தஞ்சையில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் மலேசிய நாட்டின் தொழிலதிபர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.
தஞ்சை தொழிலதிபர்கள் தஞ்சை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசி மலேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகளில் நான்காம் புரட்சி ஏற்பட்டுள்ளது.
ஆன் லைன் வணிகம் அதிகரித்துவிட்டது என்றவர் மலேசியாவில் கொரோனா தொற்று காலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் மலேசிய அரசு ஊதியம் வழங்கி நெருக்கடியில் இருந்து காப்பாற்றியது.
தமிழக தொழிலாளர்களுக்கு மலேசியாவில் நல்ல ஊதியத்துடன் வேலை நிறைய உள்ளது முறையான அனுமதியுடன் வந்தால் தங்கும் இடத்தை உறுதி செய்து வேலை வழங்கப்படும் என்றவர்
தமிழகத்தில் தூத்துக்குடி, கோவை, இராமநாதபுரம் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மலேசிய தொழிலதிபர்களோடு கலந்துரையாடல் நடத்தியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்