BREAKING NEWS

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 12.வது வார்டு புது ரோடு சாலையில் செல்லும் கழிவு நீரினால் வாகன ஓட்டிகள் அவதி துர்நாற்றம் வீசி தொற்று பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 12.வது வார்டு புது ரோடு சாலையில் செல்லும் கழிவு நீரினால் வாகன ஓட்டிகள் அவதி துர்நாற்றம் வீசி தொற்று பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 12.வது வார்டு புதுரோடு சாலை மிகவும் பிரதான சாலையாக இருந்து வருகிறது.

நாள்தோறும் இரு சக்கரம் கார் கனரக வாகனங்கள் என இலட்சக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வரக்கூடிய சாலையின் ஓரம் கழிவுநீர் கால்வாய் ஓடை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது .

மருத்துவமனை தொழிற்சாலை, குடியிருப்புவாசிகள்,பகுதிகள் வெளியேறும் கழிவு நீர் என பிரதான கழிவு நீர் ஓடையாக இருந்துவரும் அப்பகுதியில் தற்போது எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் சீரமைப்பு பணி நடைபெறுவதால் அவ்வழியாக செல்லக்கூடிய கழிவுநீர் சாலை வழியாக வெளியேறி குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 12.வது வார்டு புதுரோடு சாலை, ராமலிங்கபுரம், பெருமாள்புரம்,பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு உள்ளிட்ட அப்பகுதி குடியிருப்பில் உள்ள மக்கள் நாள்தோறும் அப்பகுதி வழியாக பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலகம் செல்லக் கூடியவர்கள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இப்பணியின் காரணமாக கழிவுநீர் சாலையில் தேங்கி கிடப்பதால் மற்றும் ஆறு மாறி செல்வதால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து நகராட்சி இடமும் நெடுஞ்சாலைத்துறை இடமும் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை எனவே நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு தொற்று பரவும் அபாயத்தை தடுக்கும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )