BREAKING NEWS

அந்தியூர் அருகே பர்கூரில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது.

அந்தியூர் அருகே பர்கூரில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் அருகே உள்ள கல்வாரை பகுதியில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனி படை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர்கள். தேவராஜ். சென்னிமலை. சுப்பிரமணியம் .பிரபு குமார். ஆகியோர் கல்வாரை பகுதியில் செல்லப்பன் (வயது 32) என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அவரது வீட்டில் உரிமம் பெறாமல் பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் பால்ஸ் குண்டுகள் மருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது பின்னர் செல்லப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )