கோவில்பட்டி அருகே பெருமாள் கோவிலில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை கதவை உடைத்து திருட்டு – காவல்துறை விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள சுபா நகர் பகுதியில் ஸ்ரீ நித்தியா கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் சுவாமி சன்னதி கதவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான போகர் ஸ்ரீனிவாச பெருமாள் ஐம்பொன் சிலையை திருடி சென்றுள்ளார்.
இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பக்தர்கள் கோவில் திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த பொழுது ஐம்பொன் சிலை திருடு போயிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அப்போது மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறுப்பு டி எஸ் பி சிவசுப்பு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிஸ்லின் தேவ் ஆனந்த் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். கடந்த வெள்ளி கிழமை வருசாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.