செங்கம் அருகே டிராக்டர் மோதி கர்பினி பெண் இரண்டு வயது மகன் பலி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை மணிமேகலை தம்பதியினர் தனது இரண்டு வயது மகன் துரைமணியுடன் புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது முடியனுர் ஆற்று பாலம் அருகே பின்னோக்கி அதிவேகமாக வந்த டிராக்டர் மோதி இரண்டு வயது குழந்தையான துரைமணி நிகழ்வு இடத்திலேயே உடல் நசங்கி உயிரிழந்த நிலையில் ,
படுகாயம் அடைந்த 7 மாத கர்ப்பிணியான மணிமேகலையை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த ராஜதுரை செங்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கிராம சாலையில் அதிவேகமாக டிராக்டர் இயக்கி விபத்து ஏற்படுத்திய போளூர் நைனாவரம் பகுதியைச் சேர்ந்த ஒட்டுனர் சின்னசாமி என்பவர் அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த புதுப்பாளையம் காவல்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற ஓட்டுநர் சின்னசாமி மீதுவழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர் ஏழு மாத கர்ப்பிணி பெண் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள தனது கணவர் குழந்தையுடன் சென்றபோது விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.