அப்படியே அழுது கொண்டிருந்தவர் அடுத்த சில மணி நேரத்தில் திடீரென மயங்கி விழுந்து மூர்ச்சையானார். பதறிப் போன உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் உட்பட கிராமமே சோகத்தில் மூழ்கியது.
இதனையடுத்து இறந்த அந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்து இருவரின் உடல்களையும் அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்து சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியால் அனைவரும் சோகத்தில் மூழ்கினாலும் இருவரின் இணைபிரியா உறவு அனைவரையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.