BREAKING NEWS

தஞ்சை குப்பை கிடங்கில் மனித உயிர் எரிந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாத மேயர் திடீரென எழுந்து சென்றதால் மாமன்ற கூட்டம் பாதியில் முடிந்தது.

தஞ்சை குப்பை கிடங்கில் மனித உயிர் எரிந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாத மேயர் திடீரென எழுந்து சென்றதால் மாமன்ற கூட்டம் பாதியில் முடிந்தது.

தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் சன்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது 8 வது வார்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மாமன்ற உறுப்பினர் இப்ராஹிம்க்கு ஆணையர் சரவணகுமார் பரிவட்டம் கட்டி வாழ்த்து தெரிவித்தார்.

 

 

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் இதுவரை குப்பைகள் தான் எரிந்தது தற்போது ஒரு மனித உயிரை எரிந்து விட்டது மாநகர் முழுவதும் குப்பைகள் மண்டி கிடப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.

 

 

இதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய மேயர் சன் ராமநாதன் திடீரென அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார் இதனால் மாமன்ற கூட்டம் பாதியில் முடிந்தது தஞ்சை பழைய, புதிய பேருந்து நிலையங்களின் அருகில் 2 இடங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒற்றை வரியில் நிறைவேறியது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )