தஞ்சாவூரில் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த ஆண்டு சிறப்பு வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம் ஆரணி திருபுவனம் பட்டு புடவைகள்,
கோவை கோரா காட்டன் சாரிகள், கூறைநாடு புடவைகள் பல்வேறு ஊர்களில் நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், இந்த ஆண்டு புதுவரவாக லினன் சேலைகள், மேலும் போர்வைகள் படுக்கை கைவிரிப்புகள் தலையணை உறைகள் வேட்டிகள் லுங்கி துண்டு ரகங்கள் பருத்தி சட்டைகள்,உள்ளிட்டவை விற்பனைக்காக உள்ளன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோ ஆப் டெக்ஸ் தஞ்சாவூர் மண்டலத்திற்கு 13 கோடி ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் தஞ்சை வைரம் விற்பனை நிலையத்திற்கு ஒரு கோடி 70 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் தவணை திட்டத்தில் 11, 12வது மாத தவணைகளை கோ.ஆப்.டெக்ஸ் நிறுவனம் செலுத்தும் மேலும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீதம் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அன்பழகன் விற்பனை நிலைய மேலாளர்கள் ஸ்ரீதர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.