பொறையர் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் வெல்ஸ்பன் பவுண்டேஷன் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் முகம் நடைபெற்றது.

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர் முகம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசு முத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு பிரிவு சார்பில் பொறையார் தவசு முத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு முகம் நடைபெற்றது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார், வெல்ஸ்பன் எஸ்.என்.ஆர்.பி பாதுகாப்பு துறை மேலாளர் கோபிராஜ், மற்றும் சமூகப் பொறுப்புணர்வு அலுவலர்கள் ஜூலியஸ் தூய மணி, வேலு, சுப்ரியோ, ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.