BREAKING NEWS

கடலூர் மாவட்டத்தில், இறந்தவரின் உடலை இடுப்பளவில் தண்ணீரில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யும் அவலம்.

கடலூர் மாவட்டத்தில், இறந்தவரின் உடலை இடுப்பளவில் தண்ணீரில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யும் அவலம்.

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் கோமூகி ஆற்றின் மயூரா சிற்றாற்றிற்கு அப்பால் உள்ள இடுகாட்டிற்கு உடலை நல்லடக்கம் செய்வதற்காகவும் ஈமச்சடங்கு செய்வதற்காகவும்,

 

சிற்றாருக்கு அப்பால் உள்ள விளைநிலங்களுக்கு செல்வதற்காகவும் விலைப் பயிர்களை சந்தைப்படுத்துவதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அதீத வெள்ளம் காரணமாக உடைப்பு ஏற்பட்டது. 

 

இந்த தரைப் பாலத்தை சரி செய்து தர வேண்டி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சிற்றாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

இதனிடையே இந்த கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து (75) த/பெ முத்துகருப்பன் இவர் வயதுமூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார்.

 

இந்நிலையில் இவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக சிற்றாற்றின் அப்பால் உள்ள இடுகாட்டிற்கு இடுப்பளவில் தண்ணீரில் சடலத்தைத் தூக்கிச் சென்று உடலை நல்லடக்கம் செய்தனர்.

 

பருவமழை காலங்களில் சிற்றாற்றில் வெள்ளம் வரும் போதெல்லாம் இது போன்ற அவல நிலை ஏற்படுவதாகவும் இதனால் உடலை நல்லடக்கம் செய்ய கிராம மக்கள் பெரும் சிரமப்படுவதாகவும்,

 

விலை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )